ஒரே வீட்டில் 20 ஆண்டுகள் மனைவியிடம் பேசாத கணவர்... மௌனத்தைக் கலைத்ததன் பின்னணியில் அதிர்ச்சி காரணம்!

 
japan

ஜப்பானின் ஹொக்கைடோ பகுதியில் வசிக்கும் ஒகுவோ கடாயாமா மற்றும் யும்பி தம்பதியினர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். அவர்கள் இருவரும் கடந்த 20 ஆண்டுகளாக ஒருவரோடு ஒருவர் நேரடியாக எவ்விதப் பேச்சும் இன்றி வாழ்ந்து வந்தனர். மனைவி ஏதேனும் கேட்டால் தலை அசைப்பது அல்லது இருமுவது மட்டுமே கணவரின் வழக்கமாக இருந்துள்ளது. பெற்றோர் ஒருவருடன் ஒருவர் பேசுவதைக் கூடப் பார்த்திராத 18 வயது இளைய மகன் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை அணுகினார்.

அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சி தம்பதியினரை அவர்கள் முதன்முதலில் சந்தித்த பூங்காவிற்கு அழைத்துச் சென்றது. அங்கே வைத்து இத்தனை ஆண்டுகள் ஏன் பேசவில்லை எனக் கேட்டபோது கணவர் அதற்கு விசித்திரக் காரணத்தைக் கூறினார். மனைவி குழந்தைகள் மீது அதிக அன்பும் கவனமும் செலுத்தியதால் ஏற்பட்ட பொறாமையே காரணம் எனத் தெரிவித்தார். பின்னர் இத்தனை ஆண்டுகள் குழந்தைகளை நன்றாகக் கவனித்துக் கொண்டதற்கு நன்றி எனக் கூறிப் பேச்சைத் தொடங்கினார்.

Lived In Same House, Fathered 3 Kids But Didn't Speak To Wife For 20 Yrs Because...: 'What A Manchild' | Viral News - News18

இரண்டு தசாப்தங்களாக நீடித்து வந்த கணவனின் இந்த நீண்ட மௌனம் இறுதியில் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. சொந்தக் குழந்தைகள் மீதே பொறாமைப்பட்டு மனைவியிடம் பேசாமல் இருந்த கணவனின் கூற்று பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. குடும்ப உறவுகள் மற்றும் புரிதல் குறித்து சமூக வலைதளங்களில் பேசப்படும் போதெல்லாம் இந்தச் செய்தி பரவி வருகிறது.