ஜூலை 22ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் திருக்கோவில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் ஆண்டாள் பிறந்த நாளில் ஆடிப்பூர தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். பெரியாழ்வார், ஆண்டாள் என இரண்டு ஆழ்வார்கள் அவதரித்த பெருமைக்குரிய இத் திருத்தலத்தில் ஆடிப்பூ தேரோட்டம் சிறப்பாக நடத்தப்படும்.
இதற்காக ஜூலை 14ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலத்துடன் திருவிழா தொடங்கியது. நாளை ஜூலை 21ம் தேதி வெள்ளிக்கிழமை திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆண்டாள் கோயில் தேரோட்ட திருவிழா நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு ஜூலை 22ம் தேதி சனிக்கிழமை விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பிறப்பித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?