பள்ளிகளில் சிப்ஸ், சாக்லெட் உட்பட ஜங்க் ஃபுட் விற்பனைக்குத் தடை!

 
ஜங்க்

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அம்மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை பள்ளிகளில் ஜங்க் ஃபுட் எனப்படும் துரித உணவுகளுக்கு முழுமையான தடை விதித்துள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சிப்ஸ், சாக்லெட், குளிர்பானங்கள் மற்றும் நொறுக்குத்தீனிகள் விற்பனை செய்யக் கடுமையான தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்களிடையே ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை ஊக்குவிக்கவும் உடல்நலத்தைப் பாதுகாக்கவும் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜங்க் ஃபுட்ஸ் அதிகம் சாப்பிடறீங்களா? இத கேட்டால் இப்போவே நிறுத்திடுவீங்க! / do you know why the junk foods are not good for health

இந்தத் தடையானது பள்ளி வளாகத்திற்குள் மட்டுமல்லாமல் பள்ளி வளாகத்தில் இருந்து 50 மீட்டர் சுற்றளவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்தச் சுற்றளவுக்குள் துரித உணவுகளை விற்பனை செய்யவும் மற்றும் விளம்பரம் செய்யவும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி துரித உணவுகளை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி உணவகங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள வணிக நிறுவனங்கள் இந்த புதிய உத்தரவை உடனடியாகப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஜங்க் ஃபுட்ஸ் அதிகம் சாப்பிடறீங்களா? இத கேட்டால் இப்போவே நிறுத்திடுவீங்க! / do you know why the junk foods are not good for health

மாணவர்கள் சிறு வயதிலேயே துரித உணவுகளுக்கு அடிமையாவதைத் தடுத்துச் சத்தான உணவுகளை உண்ண வைப்பதே இதன் முதன்மை நோக்கமாகக் கருதப்படுகிறது.  பள்ளிகளில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் மட்டுமே கிடைக்க வழிவகை செய்ய அரசுத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பெற்றோர்களும் ஆசிரியர்களும் அரசின் இந்த ஆரோக்கியமான நடவடிக்கைக்குத் தங்களது முழுமையான ஆதரவையும் வரவேற்பையும் தெரிவித்துள்ளனர்.