JUST IN: ஈரானின் முக்கிய தளபதிகள் அலி லரிஜானி. சுலைமானி படுகொலை!" - இஸ்ரேல் அறிவிப்பு - வளைகுடா நாடுகளில் அதிகரிக்கும் போர் பதற்றம் !

 
ஈரான் தளபதி போர் ஈரான் தளபதி போர்

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான நேரடி மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் மிக முக்கிய தளபதிகள் இஸ்ரேலிய விமானப்படை நடத்திய துல்லியமான தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் வழங்கிய தகவலின்படி, ஈரானிய தளபதிகள் தங்கியிருந்த ரகசிய இடத்தைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஈரான் தளபதி போர்

ஈரானின் முக்கிய பாதுகாப்பு அதிகாரியான அலி லரிஜானி மற்றும் புரட்சிகர காவல் படையின் மூத்த தளபதியான சுலைமானி  ஆகியோர் தங்கியிருந்த தற்காலிகக் கூடாரங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் சுலைமானியின் நெருங்கிய உதவியாளரும், துணை தளபதியுமான சையது கரிஷி என்பவரும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ளது.

ஈரான் அணு

இந்தத் தாக்குதலுக்கு முன்னதாகவே, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக ஈரான் தனது ஏவுகணைகளை ஏவி வந்தது. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மற்றும் இஸ்ரேலின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போதைய உயர்மட்ட அதிகாரிகளின் படுகொலை ஈரானை மேலும் ஆத்திரமடையச் செய்துள்ளதால், "கடுமையான பழிவாங்கல்" நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.

இந்த போர்ச் சூழல் காரணமாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயரத் தொடங்கியுள்ளது. வளைகுடா நாடுகளில் பதற்றம் நிலவுவதால் கப்பல் போக்குவரத்துகளும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.