கலைமாமணி விருது பெற்ற பிரபல ஓவியர் மாருதி காலமானார்!!

 
மாருதி

புதுக்கோட்டையில் 1938, ஆகஸ்டு 28ம் தேதி டி.வெங்கோப ராவ், பத்மாவதி பாய் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர் பிரபல ஓவியர் மாருதி. இவருக்கு வயது 86. இன்று ஜூலை 27ம் தேதி வியாழக்கிழமை காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  மாருதி கண்மணி, பொன்மணி, விகடன்,குமுதம்,  குங்குமம் இதழ்களுக்கு அட்டைப்படம் வரைந்துள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.

மாருதி
பிரபல ஓவியர்   மாருதியின் இயற்பெயர் இரங்கநாதன். விகடன், குமுதம், குங்குமம், கண்மணி, பொன்மணி போன்ற இதழ்களுக்கு அட்டைப்படமும், கதை கவிதைகளுக்கு ஏற்ற ஓவியங்களும் வரைந்து வண்ணமயமாக்கியவர்.    'உளியின் ஓசை', 'பெண் சிங்கம்' ஆகிய திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார்.  

rip

இவரது திடீர் உயிரிழப்பு  ஓவியர் அரஸ்  “அவரின் மகள்கள் இரண்டு பேரையும் பூனேவில் திருமணம் செய்து கொடுத்துள்ளார்.  அவர் மட்டும் தான் இங்கே இருந்தார். இந்நிலையில் அவருக்கு உடல்நிலை மோசமானதால், அவரின் மகள்கள் பூனேவுக்கே கூட்டிச் சென்றனர்.  அவருக்கு அங்கே தனியாக இருப்பது போன்ற உணர்வு இருந்ததால் அவர் மட்டும் திரும்பச் சென்னைக்கே வந்துவிட்டார்.  இங்கே வந்த பிறகு அவருக்குத் திரும்ப  இதயநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். 1969 முதல் ஓவியங்கள் வரைந்து வந்தார்.  அவரின் மறைவு கலைத்துறைக்குப் பெரிய இழப்பு!" எனக் கூறியுள்ளார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!