தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை உயர்த்திட, அறிவுச் சூரியனாய் வந்துதித்த தமிழினத் தலைவர் கருணாநிதி... முதல்வர் ஸ்டாலின் !
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாள் விழா இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கருணாநிதி 5 முறை முதலமைச்சராகவும், 13 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், அரை நூற்றாண்டு காலம் அரசியலில் கோலோச்சியவர். கலைஞரின் பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், திமுக சார்பில் 102 பிறந்த நாள் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை உயர்த்திட, அறிவுச் சூரியனாய் வந்துதித்த தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்தநாள்!
— M.K.Stalin (@mkstalin) June 3, 2025
முச்சங்கம் கண்ட முத்தமிழுக்குச் செம்மொழிச் சிறப்பு செய்த முத்தமிழ்க் காவலரைப் போற்றிடும் #செம்மொழிநாள்!
ஐந்து முறை முதலமைச்சராகத் தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரலாறு பல படைத்து… pic.twitter.com/H74mvH1PDD
நாகை மாவட்டம் திருக்குவளையில் கலைஞர் பிறந்த வீட்டில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிலையில் கலைஞரின் பிறந்தநாளையொட்டி மு.க.ஸ்டாலின், அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

தனது எக்ஸ் தள பக்கத்தில் முதல்வர் வெளியிட்டுள்ள பதிவில், “தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை உயர்த்திட, அறிவுச் சூரியனாய் வந்துதித்த தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்தநாள்! முச்சங்கம் கண்ட முத்தமிழுக்குச் செம்மொழிச் சிறப்பு செய்த முத்தமிழ்க் காவலரைப் போற்றிடும் #செம்மொழிநாள்! ஐந்து முறை முதலமைச்சராகத் தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரலாறு பல படைத்து - இந்தியாவுக்கே வழிகாட்டும் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தை 50 ஆண்டுகள் வழிநடத்தி, ஒளியும் நிழலும் ஒருசேர வழங்கிய தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள் எனப் பெருமை கொள்வோம்!” என பதிவிட்டுள்ளார்.
