சபரிமலையின் புதிய தந்திரியாகக் கண்டரரு பிரம்மதத்தன் நியமனம்!

 
சபரிமலை புதிய தந்திரி கண்டரரு பிரம்மதத்தன்

சபரிமலை ஸ்ரீ அய்யப்பன் கோயிலின் புதிய முதன்மைத் தந்திரியாகத் தாழமண் தந்த்ரி குடும்பத்தைச் சேர்ந்த கண்டரரு பிரம்மதத்தன் நியமிக்கப்பட்டுள்ளார். சபரிமலை கோயிலின் முக்கிய ஆன்மீகச் சடங்குகளை வழிநடத்தி வந்த மூத்த தந்திரி கண்டரரு ராஜீவரு, தனது பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்:

மூத்த தந்திரி கண்டரரு ராஜீவரு, தனது தீவிர உடல்நலக் குறைவு காரணமாகத் தந்திரிகளுக்கான அன்றாடப் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் இருப்பதாகக் கூறி, பொறுப்பில் இருந்து விலக அனுமதி கோரினார். அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியம், புதிய தந்திரியை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தது.

ஐயப்பன் சபரிமலை இருமுடி

தாழமண் குடும்பத்தின் மரபுப்படியும் தேவஸ்தான விதிகளின்படியும் புதிய தந்திரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தாழமண் குடும்பத்தைச் சேர்ந்த இளம் ஆளுமையான கண்டரரு பிரம்மதத்தன் புதிய தந்திரியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் ஆகஸ்ட் மாதம் பிறக்கவுள்ள மலையாளச் 'சிங்க மாதத்தின்' முதல் நாளில், கண்டரரு பிரம்மதத்தன் சபரிமலை ஸ்ரீ அய்யப்பன் கோயிலின் புதிய தந்திரியாக முறைப்படி தனது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு ஆன்மீகச் சடங்குகளை வழிநடத்துவார்.