முதல்வர் மருந்தகத்தில் இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து - கனிமொழி கண்டனம்!
Sep 18, 2026, 17:10 IST
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள முதல்வர் மருந்தகத்தில் பணியாற்றிய இளம் பெண் கத்தியால் குத்தப்பட்ட நிகழ்வுக்கு எம்பி கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள முதல்வர் மருந்தகத்துக்குள் திடீரென நுழைந்த இளைஞர் ஒருவர், அங்கு பணியாற்றி வந்த 23 வயது இளம் பெண்ணை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள எம்பி கனிமொழி, தமிழ்நாட்டில் பட்டப்பகலில் கொலைகளும் வெட்டுக்குத்துகளும் நடப்பது சர்வ சாதாரணமாக மாறிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
விளம்பரங்களில் மூழ்கிக் கிடந்து மக்களின் உயிரோடு அரசு விளையாடுகிறதா என்று அவர் தனது கண்டனப் பதிவில் கடுமையான கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
