15 வயது மாணவி, 21 வயது வாலிபர் ரயில் மோதி பலி... தற்கொலையா? போலீஸ் விசாரணை!

 
suicide

 

ரயில் முன் மாணவியும் வாலிபரும் உயிரிழப்பு... தற்கொலையா? போலீசார் தீவிர விசாரணை

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக காணாமல் போன 15 வயது பள்ளி மாணவியும், அவரது உறவினரான 21 வயது வாலிபரும் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது எதிர்பாராத விதமாக ரயிலில் சிக்கி உயிரிழந்தார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொல்லம் மாவட்டம் கண்ணநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அபிலாஷ். 21 வயதான இவர், அதே மாவட்டத்தை சேர்ந்த தனது 15 வயது உறவினரான விஸ்மையாவுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. விஸ்மையா 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

Missing youth, teen girl found dead on railway track in Angamaly; police suspect suicide | Kerala News in English | Onmanorama

இந்நிலையில், சம்பவத்துக்கு 2 நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்ற விஸ்மையா, பின்னர் வீடு திரும்பவில்லை. அதேபோல் அபிலாஷும் காணாமல் போனதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இருவரையும் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் அவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் கண்ணநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று அதிகாலை சுமார் 1.45 மணியளவில் அங்கமாலி ரயில் நிலையத்தில் திருச்சூர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி இரண்டு பேர் உயிரிழந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர், உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், ரயில் மோதி உயிரிழந்தவர்கள் காணாமல் போன அபிலாஷ் மற்றும் விஸ்மையா என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இருவரும் எதற்காக அங்கமாலி ரயில் நிலையம் சென்றனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் ரயிலில் சிக்கி உயிரிழந்தார்களா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

பிரேத பரிசோதனை முடிவுகள் மற்றும் போலீஸ் விசாரணையின் அடிப்படையில் சம்பவத்தின் முழு பின்னணி தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் கொல்லம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.