மே மாதம் முதல் பயன்பாட்டு வரும் கிளாம்பாக்கம் ரயில் நிலையம்!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தமிழக அரசு பல ஏற்பாடுகளை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை கடந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து விரைவு பேருந்துகள் உட்பட அரசு பேருந்துகள் சேவை செயல்பட தொடங்கியது. பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு செல்ல கூடுதல் இணைப்பு பேருந்துகள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே புறநகர் ரெயில் நிலையம் அமைக்க வேண்டுமென பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் அமைப்பதற்கான முன்னேற்பாடுகளை, தமிழ்நாடு அரசு மேற்கொண்டது. தமிழ்நாடு அரசின் பங்களிப்போடு கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது இதன்படி கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து சுமார் 500 மீட்டருக்கு குறைவான தூரத்தில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டது. வண்டலூர்- ஊரப்பாக்கம் புறநகர் ரெயில் நிலையங்களுக்கு இடையே கிளாம்பாக்கத்தில், 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த ரயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் 12 பெட்டிகள் உடைய ரயில் நிற்கும் வகையில், 3 நடைமேடைகள் அமைக்கப்பட உள்ளன. கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரயில் நிலையம், மே மாதம் பயன்பாட்டுக்கு வரும் என ரயில்வே அதிகாரிகள் தகவல் வெளியிட்டு உள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு சில காரணங்களுக்காக தாமதமானது.
இந்த சூழலில் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால் இந்த ஆண்டு மே மாதம் பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!