சிரிப்பு வீடியோ... நான் எப்படி மாமா இருக்கேன்?... மாவு பிசைந்த கையோடு ‘பளார்’ விட்ட கணவன்!

சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒரு சில தான் வைரலாவதுண்டு. அந்த வகையில் சமீபத்தில் வைரலாகும் வீடியோவில் கணவன்-மனைவிக்கிடையேயான சிறிய உரையாடல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், மனைவி கைபேசியில் வீடியோ எடுக்கிறார்.
“பேபி, நான் எப்படி இருக்கிறேன்?” என கேட்க, அந்த நேரத்தில் கிச்சனில் மாவை பிசைந்துக்கொண்டிருக்கும் கணவர், பதில் சொல்லாமல் நேராக, மாவு பூசிய கையால் அவரது முகத்தில் வேகமாக பளார் என ஒரு அறை விட்டார். அதில் மனைவியின் முகம் முழுக்க மாவு படிந்து காட்சியளிக்கிறது. இன்ஸ்டாவில் இந்த வீடியோ பகிரப்பட்டதிலிருந்து 3 கோடிக்கு மேல் பார்வையாளர்கள் பார்த்து ரசித்து நகைச்சுவையாக கமெண்ட் எழுதி வருகின்றனர்.
“இந்த சம்பவத்துக்குப் பிறகும் அந்த ஆண் உயிரோட இருக்காரா?” என ஒருவர் எழுதியுள்ளார். மேலும் ஒருவர் , “மாவை சாயம் மாதிரி தேய்த்துட்டாரே, அண்ணா நம்ப பாஸ்” என கலாய்த்துள்ளார். இது ஒரு நகைச்சுவை நோக்கத்தில் எடுக்கப்பட்ட வீடியோ எனக் கூறப்படும் நிலையில், பலரும் இதைப் பார்த்து ரசித்து வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!