சிறுத்தை தாக்கி சிறுமி பலி!! திருப்பதியில் அதிர்ச்சி!!
திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. ஏழுமலையானை தரிசிக்கை உலகம் முழுவதும் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இந்த பக்தர்களில் சிலர் அலிபிரி மற்றும் ஸ்ரீ வாரி மெட்டு மலைப்பாதையில் நடந்து சென்று சாமி தரிசனம் செய்வர். இந்த அலிபிரி மலைப்பாதை அடர்ந்த வனப்பகுதி என்பதால் அங்குள்ள வனவிலங்குகள் அடிக்கடி நடை பாதைக்கு வந்துவிடும்.குறிப்பாக சிறுத்தை வெளியில் வந்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகி வருகிறது.
ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் போத்தி ரெட்டி பாளையத்தில் வசித்து வரும் தினேஷ் குமார் அவருடைய மனைவி சசிகலா , மகள் லக்ஷிதா மகன் தினேஷ்குமார் அனைவரும் நேற்று இரவு 7. 30 மணி அளவில் அலிபிரி நடைபாதையில் நடந்து சென்றனர். நரசிம்ம சாமி கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது, சிறுமி லக்ஷிதா திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், பக்தர்கள் கூட்டத்தில் மகளை தேடி அலைந்தனர். நீண்ட நேரமாகியும் மகள் கிடைக்கவில்லை. இதனால் பெற்றோர் பதற்றத்துடன் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறை மற்றும் தேவஸ்தான விஜிலென்ஸ் இணைந்து இரவு முழுவதும் சிறுமி லக்ஷிதாவை வனப்பகுதி முழுவதும் தேடி வந்தனர். மலைப்பாதையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், சிறுமி பெற்றோரை விட்டு முன்னதாக தனியாக நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.
இந்நிலையில் இன்று காலை 7 மணியளவில் சிறுமி லக்ஷிதா நரசிம்மசாமி கோவில் அருகே ரத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்துள்ளார்.சிறுமியின் உடல் அருகே சிறுத்தையின் சாணம் கிடந்ததை அடுத்து, சிறுத்தை தான் சிறுமியை இழுத்துச் சென்று அடித்து கொன்றிருக்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் திருப்பதியில் நடைபாதை வழியாக மலைக்கு செல்பவரிடையே பெரும் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?