நீட்டை ஒழித்துக்கட்டும் போராட்டத்தைத் தொடர்வோம்... முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்!

நீட் தேர்வு குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து தற்போது வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்தியக் கூட்டாட்சியியல் வரலாற்றில் இது ஒரு கருப்பு அத்தியாயம், மக்களாட்சி முறைக்கு இழைக்கப்பட்டுள்ள மாபெரும் அநீதி என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, இருமுறை தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசின் அமைச்சகங்கள் கோரிய அனைத்து விளக்கங்களையும் அளித்த பின்னரும் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் விருப்பமான #NEET விலக்குச் சட்டத்துக்கு ஒப்புதல் மறுக்கப்பட்டுள்ளது.
இந்தியக் கூட்டாட்சியியல் வரலாற்றில் இது ஒரு கருப்பு அத்தியாயம்! மக்களாட்சி முறைக்கு இழைக்கப்பட்டுள்ள மாபெரும் அநீதி. நீதியை நிலைநாட்டுவோம்! நீட்டை ஒழித்துக்கட்டும் போராட்டத்தைத் தொடர்வோம்” என பதிவிட்டுள்ளார்.