நீடிக்கும் பதற்றம்... ரூ.63,000 கோடி மதிப்பிலான போர் விமானங்களை பிரான்சிடமிருந்து வாங்கும் இந்தியா!

இந்த புதிய ரஃபேல் எம் விமானங்கள் இந்திய கடற்படையின் பலத்தையும் விமானம் தாங்கிக் கப்பல்களின் திறனையும் அதிகரிக்க உதவும். தற்போது இந்தியாவின் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா மற்றும் ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கிக் கப்பல்களில் மிக்-29 கே போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பராமரிப்பு சிக்கல்கள் காரணமாக அவை சரிவர செயல்பட முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிகிறது. உடனடியாக தேவைப்படும் ரஃபேல் எம் விமானங்கள் மூலம் இந்திய கடற்படை எதிரி கப்பல்களை குறிவைக்கும் தூரஏவுகணை தாக்குதல்களை மேற்கொள்ளும் திறனை அதிகரிக்க முடியும்.
இந்த ஒப்பந்தம் தற்காலிக தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. காரணம், இந்தியா தற்போது தனது சொந்த இரட்டை எஞ்சின் போர் விமானம் ஒன்றை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அந்த தளம் சார்ந்த விமானம் தயாரிக்க இன்னும் சுமார் 10 ஆண்டுகள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை, ரஃபேல் எம் போர் விமானங்கள் இந்திய விமானம் தாங்கிக் கப்பல்களில் இருந்து செயல்பட்டு நாட்டின் கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்தும். மேலும் தற்போது பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே போர் நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்தியா போர் விமானங்களை வாங்க இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!