இன்று முதல் மதுபானங்களின் விலை உயர்வு!! மதுபானப்பிரியர்கள் அதிர்ச்சி!!
தமிழக அரசு கட்டுப்பாட்டில் கீழ் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் 5329 மதுபான சில்லறை விற்பனை கடைகள் இருந்த நிலையில் 500 கடைகள் மூடப்பட்டன. பிரச்சார கூட்டத்தில் பூரண மதுவிலக்கை பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் 500 டாஸ்மாக் கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளன.
தமிழக அரசுக்கு வருவாய் அதிகரித்து வரும் நிலையில் நிர்ணயித்த விலையை விட கூடுதலாக பணம் வசூலித்தால் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதுபானம், பீர், ஒயின் விலையை உயர்த்தியுள்ளது. குவாட்டருக்கு ரூ.10 முதல் முழு பாட்டிலுக்கு ரூ.320 வரை உயர்ந்துள்ளது. மதுபானங்களின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?