டிசம்பர் 13ம் தேதி உள்ளூர் விடுமுறை... கலெக்டர் திடீர் அறிவிப்பு!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா டிசம்பர் 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து தினமும் காலை இரவு இருவேளைகளிலும் பஞ்சமூர்த்திகள் வீதி உலா தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சி டிசம்பர் 13ம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

இந்நிலையில், கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு டிசம்பர் 13ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ” திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை மகா தீபத் திருவிழா நாளான 2024-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று மாவட்டத்தில் உள்ள மாநில அரசின் ஆளுகைக்கு உட்பட்டு இயங்கும் அனைத்து அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் அரசு சார்புடைய நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் டிசம்பர் 21ம் தேதி சனிக்கிழமை அனைத்து அலுவலகங்களும் பணி நாளாக செயல்படும். அவசர தேவைகளின் அடிப்படையில் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் அனைத்தும் குறைந்தபட்ச எண்ணிக்கையுடனான ஊழியர்களைக் கொண்டு இயங்கும். ” எனத் தெரிவித்துள்ளார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
