நிலவில் விழுந்து நொறுங்கிய லூனா!! ரஷ்யாவின் கனவு சிதைந்தது!!

 
லூனா

ரஷ்ய  விண்வெளி நிறுவனம்  ராஸ்காமோஸ், வோஸ்டோக்னி காஸ்மோட்ரோம் ஏவுதளத்திலிருந்து லூனா-25 என்ற விண்கலத்தை  விண்ணில் ஏவியுள்ளது. இந்த விண்கலம் சோயுஸ் 2.1பி ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. ரஷ்யா   47 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நிலவுக்கு அனுப்பப்பட்ட விண்கலம்  . இந்த விண்கலம் இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலத்துக்கு முன்பாகவே நிலவின் தென் துருவத்தில் இறங்கும் என தகவல் வெளியானது.  

லூனா

கடைசி நேரத்தில் கட்டுப்பாடற்ற சுற்றுப்பாதையில் சிக்கிக் கொண்டதால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக லூனா-25 விண்கலம் நிலவில் மேற்பரப்பின் மோதி நொறுங்கியது . இதனை ரஷ்ய விண்வெளி நிறுவனம் ராஸ்காமோஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இந்த விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.  எந்தமாதிரியான   தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டன என்பது குறித்து தகவல்கள்   எதுவும் தெரியவில்லை எனவும்  ராஸ்காமோஸ் தெரிவித்துள்ளது.  லூனா-25  குறித்து  “நிலவில் தண்ணீர் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும்  

லூனா

புதினைப் பொருத்தவரை நிலவை ஆய்வு செய்ய வேண்டும் என்பது இலக்கு அல்ல. விண்வெளி ஆய்வில் சிறந்து விளங்குவதாக சீனாவும் அமெரிக்காவும் கூறிக்கொள்கின்றன. வேறு சில நாடுகளும் இந்த சாதனையை எட்ட முயற்சிக்கின்றன. எனவேதான் ரஷ்யா இந்த விண்கலத்தை அனுப்பி உள்ளது. இதன்மூலம் சோவியத் யூனியனின் நிபுணத்துவத்தை மீட்க வேண்டும் என்பதுதான் நோக்கம்” எனக்குறிப்பிட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

From around the web