அதிர்ச்சி!! மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் கைது!!
ஆகஸ்ட் 9, 1942ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கம் மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்டது. இதனை நினைவுகொள்ளும் வகையில் ஒவ்வொரு வருடமும் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி. மும்பையில் நடந்த ’வெள்ளையனே வெளியேறு’ நாள் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு செல்ல கிளம்பிக்கொண்டிருந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன்பு மும்பை காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
आज ९ अगस्तको जब मैं अगस्त क्रांती दिवस पर अगस्त क्रांति मैदान जाने नीकला तो पोल्स मुझे पकड़ कर साँताकृझ पोल्स स्टेशन ले आई डीटेन कर लीया। #मोदी_है_तो_मुमकीन_है।
— Tushar GANDHI (@TusharG) August 9, 2023
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் வெள்ளையனே வெளியேறு நினைவு நாள் நிகழ்வு நடத்தப்பட்டு வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் இன்றும் கிராண்ட் ரோடு புறநகர் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள கோவாலியா டேங்க் மைதானத்தில் 'வெள்ளையனே வெளியேறு’ நினைவு நாள் நிகழ்வு நடத்தப்படுகிறது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்ற போது துஷார் காந்தி, போலீசாரால் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.இது குறித்து துஷார்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சுதந்திர இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஆகஸ்ட் 9, ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’ நினைவு தினத்தை முன்னிட்டு வீட்டை விட்டு வெளியேறிய நான் சாண்டா குரூஸ் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டேன்.
எனது கொள்ளு தாத்தாவும், அப்பாவும் கூட பிரிட்டிஷ் காவல்துறையினரால் வரலாற்று சிறப்பு மிக்க இதே நாளில் கைது செய்யப்பட்டதில் நான் பெருமைப்படுகிறேன்’ என பதிவிட்டுள்ளார். சிறிது நேரத்தில் சான்டாகுரூஸ் காவல் நிலைய போலீஸார் அவரை விடுவித்தனர். அரசாங்கத்தின் புதிய பிரச்சாரமான ’மேரி மாத்தி, மேரா தேஷ்’ கிராந்தி மைதானத்தில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் அஜித் பவாரால் தொடங்கப்பட்டது. இதனால் தான் மைதானத்தில் சில மணி நேரம் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது அதனால் தடுத்து நிறுத்தப்பட்டதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?