பல்வேறு கட்டுப்பாடுகளையும் மீறி மெட்ரோவில் பிச்சை எடுத்த நபர்.. பகீர் வீடியோ வைரல்!

 
மெட்ரோவில் பிச்சை

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரயில்களில் பயணிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறிய பொருட்களை எடுத்துச் செல்ல முடியாது. பீடி, சிகரெட் மற்றும் மதுபானங்களை எடுத்துச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில் நேற்று முன்தினம் செல்லகட்டாவில் இருந்து ஒயிட்பீல்டுக்கு சென்று கொண்டிருந்த மெட்ரோ ரயிலில் மாற்றுத்திறனாளி ஒருவர் பிச்சை எடுத்தார். இதை பார்த்த பயணிகள் சிலர் செல்போனில் வீடியோ எடுத்தனர். ரயிலில் பிச்சை எடுப்பதை நிறுத்துமாறு மெட்ரோ நிர்வாகிகளிடம் சிலர் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஒயிட்ஃபீல்டு செல்லும் ரயிலில் ஒருவர் பிச்சை எடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதப் பொருளாகியுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!