மஞ்சும்மல் பாய்ஸ் பட பாணியில் விபரீதம்.. 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞர்!

 
தன்ராஜ்

கோடை காலம் துவங்கியுள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கொடைக்கானலுக்கு விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வர துவங்கியுள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் வார விடுமுறைக்காக கொடைக்கானலுக்கு வந்துள்ளனர். பல்வேறு இடங்களை பார்வையிட்ட அவர்கள் இன்று டால்பின் நோஸ் பகுதியை பார்வையிட வந்தனர்.

அங்கு இளைஞர்கள் புகைப்படம் எடுக்க முயன்றபோது, அவர்களில் ஒருவரான தன்ராஜ் 100 அடி பள்ளத்தில் விழுந்தார். அப்போது அவருடன் வந்த வாலிபர்கள் அவரை மீட்க முயன்றனர். பின்னர் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி தன்ராஜை உயிருடன் மீட்டனர்.

கீழே விழுந்ததில் அவருக்கு கை, கால்கள் மற்றும் தலையில் சிறு காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாலிபர் பள்ளத்தில் தவறி விழுந்த சம்பவம் கொடைக்கானலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆபத்தான பகுதியை கவனமாக பார்வையிட வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web