தமிழகத்தில் பல பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை நிறுத்தம் - இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

 
மகளிர் உரிமைத்தொகை உதவித்தொகை

தமிழகத்தில் பல ஆயிரம் பயனாளிகளுக்கு கடந்த மூன்று மாதங்களாக மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், அதற்கான முக்கியக் காரணங்களை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாகத் தெளிவுபடுத்தியுள்ளனர்.

பயனாளிகள் தங்கள் வங்கிக் கணக்குகளில் உரிய முறையில் ஈ-கேஒய்சி விவரங்களைப் புதுப்பிக்காததே இந்தத் தொகை நிறுத்தி வைக்கப்பட முக்கியக் காரணமாகும்.

உரிமைத்தொகை

தகுதிகாண் விதிமுறைகளின்படி, சம்பந்தப்பட்ட பயனாளிகளின் குடும்பத்தில் அரசு ஊழியர்கள் அல்லது உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பணியில் இருப்பது கண்டறியப்பட்டமையாலும் பலரது பெயர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.