திருக்கோயில் பணியாளர்களுக்கான திருமணக் கடன் ரூ.2 லட்சமாக உயர்வு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, திருக்கோயில் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு திருமணக் கடன் தொகை கணிசமாக உயர்த்தப்படுவதாக அமைச்சர் எஸ். ரமேஷ் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளின் திருமணத்திற்காக இதுவரை வழங்கப்பட்டு வந்த கடன் தொகை உயர்த்தப்பட்டு, முதுநிலைத் திருக்கோயில் பணியாளர்களுக்கு இனி ரூ.2 லட்சம் வரை கடனாக வழங்கப்படும். முதுநிலை அல்லாத பிற திருக்கோயில் பணியாளர்களுக்கு திருமணக் கடன் தொகை ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
திருக்கோயில்களில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் சுப நிகழ்ச்சிகளுக்கான நிதித் தேவைகளை எளிதாகப் பூர்த்தி செய்யவும், அவர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யவும் இத்திட்டம் வழிவகுக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
