அதிர்ச்சி... பரோட்டா சாப்பிட்ட மருத்துவ கல்லூரி மாணவி திடீர் மரணம்.. கதறிய பெற்றோர்!
கோவை மாவட்டத்தில் பரோட்டா சாப்பிட்டதால், இரண்டாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்த மருத்துவ கல்லூரி மாணவி கீர்த்தனா உயிரிழந்ததாக வெளியான தகவல் பெறும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் கீர்த்தனா. இரண்டாம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வந்த கல்லூரி மாணவி கீர்த்தனா, நேற்றிரவு பரோட்டா சாப்பிட்டு விட்டு படுக்கச் சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலையில் மாணவி கீர்த்தனாவின் உடல்நிலை மோசமாக இருந்ததைக் கண்ட அவரது பெற்றோர் பதறியடித்தப்படி உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு கீர்த்தனாவை கொண்டு சென்றனர்.
அரசு மருத்துவமனையில் கீர்த்தனாவைப் பரிசோதித்த மருத்துவர்கள், கீர்த்தனா ஏற்கெனவே மரணமடைந்ததாக தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் மருத்துவமனைக்கு சென்ற நிலையில், கீர்த்தனாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு, வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவி கீர்த்தனா சாப்பிட்ட பரோட்டா எங்கு தயாரிக்கப்பட்டது? பரோட்டா மாவில் ஏதும் கலப்படம் செய்யப்பட்டதா என்பதை ஆய்வு செய்து வருகின்றனர்.
நேற்றிரவு தங்களிடம் சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி கீர்த்தனாவின் திடீர் மரணம் அவரது பெற்றோர், தோழிகள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
