கும்பமேளாவில் நள்ளிரவில் அதிர்ச்சி... 31 பேர் பலி, 70க்கும் மேற்பட்டோர் படுகாயம்... உடனடி மீட்பு நடவடிக்கைக்கு பிரதமர் உத்தரவு!

 
மகா கும்பமேளா

உத்திரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  ஜனவரி 13ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா அடுத்த மாதம் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடும் நிலையில், இன்று தை அமாவாசையை முன்னிட்டு 10 கோடி பேர் வருகை தரலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனையொட்டி, தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அதிகாலையில்  ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள உடல்கள் அடிப்படையில் 31 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்த பெண்கள் உட்பட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகாயம்  அடைந்தவர்கள் 70க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். கூட்ட நெரிசல் நடந்த இடத்தில் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

கும்பமேளா தீவிபத்து
மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு காங்கிரஸ் தலைவர்  கார்கே “ உத்தரப்பிரதேசத்தில் கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கு அரைகுறையான ஏற்பாடுகள், நிர்வாக குளறுபடியே காரணம். வி.ஐ.பி.க்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்ததால் ஏற்பட்ட இடப்பற்றாக்குறையும் கூட்டநெரிசலுக்கு காரணம். எதிர்காலத்தில் பக்தர்கள் அதிகம் பேர் வருவார்கள் என்பதால் போதுமான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். உணவு, முதலுதவி பக்தர்கள் வந்து செல்ல போதிய பாதைகளை அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.  இது குறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்  , “உ.பி. மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு நிர்வாக குளறுபடிகளே காரணம். கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்,” எனத் தெரிவித்தார். அதே நேரத்தில்  கும்பமேளாவில் உயிரிழந்தோர் குறித்த தகவல்களை இதுவரை உத்தரப்பிரதேச அரசு அறிவிக்கவில்லை. கூட்ட நெரிசல் ஏற்பட்டு 8 மணி நேரத்துக்கு மேலாகியும் உயிரிழப்பு, காயமடைந்தவர்கள் குறித்த விவரம் அறிவிக்கப்படவில்லை. இதையடுத்து முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் பிரதமர் மோடி 3 முறை பேசியதாக தெரிகிறது.  மேலும் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த பிரதமர் மோடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web