குடும்பத் தகராறில் ஐ.டி. ஊழியர் தூக்கிட்டு தற்கொலை... மொபைலில் வீடியோ எடுத்த குழந்தை!
ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் மல்டிநேஷனல் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஐ.டி. ஊழியர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூரத் நகர் பகுதியில் வசித்து வந்த சஞ்சீவ் யாதவ் என்ற 36 வயது நபர் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் துயரச் சம்பவம் குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணைப் பணிகளைத் தொடங்கினர்.
#Gurugram | A 36-year-old associate operator at a multinational company was found hanging at his home in #Gurgaon's Surat Nagar, with police investigating allegations by his family that marital discord may have preceded his death.
— The Times Of India (@timesofindia) August 2, 2026
Police said the child is believed to have… pic.twitter.com/nPtiRWlB34
உயிரிழந்த சஞ்சீவ் யாதவிற்கும் அவரது மனைவிக்கும் இடையே கடந்த சில மாதங்களாகக் குடும்பத் தகராறு நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் அல்லது விரக்தி காரணமாக அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இது தற்கொலை அல்ல என்றும், தனது மகனைச் திட்டமிட்டுக் கொன்றுவிட்டு இதனைத் தற்கொலை போல் சித்தரித்து இருப்பதாகவும் உயிரிழந்தவரின் தந்தை காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் குடும்பத்தினர் எழுப்பிய புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் கைப்பற்றப்பட்ட டிஜிட்டல் சான்றுகள் மற்றும் கைப்பேசி பதிவுகளைக் கொண்டு அதிகாரிகள் முழுமையான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் எனவும், அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
