4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

 
மழை

 தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி  மாவட்டங்களில் காலை 7.30 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.  


  தமிழகத்தில் வெயில் நாளுக்கு நாள் கொளுத்தி வருகிறது. பகல் நேரங்களில் ஏசி ரூமுக்குள் இருந்து கொண்டு வெளியில் வருவதே இல்லை. எல்லாமே அந்த ரூமுக்குள் தான். இரவில் சாப்பிட மட்டும் தான் வெளியே மீண்டும் வருவது. வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெயில் மழை

இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் தமிழகத்தில் பல பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும். அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 102 – 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தும்.. தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை அடுத்த 5 நாட்களில் 36 37 டிகிரி ஃபாரன்ஹீட் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும்.

வெயில் பெண்கள்

இதனையடுத்து வயதானவர்கள், இணை நோய் இருப்பவர்கள் குழந்தைகள் 11 மணி முதல் 4 மணி வரை வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் வெப்பச்சலனத்தால் மழை பெய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web