லட்சங்களில் பணம்... கொங்கு மண்டலத்தில் கொடிகட்டிப் பறக்கும் விபச்சாரம்... வெளிமாநில அழகிகள் கைது!

 
பாலியல் தொழில்

கொங்கு மண்டலத்தில் விபச்சார தொழில் கொடிகட்டிப் பறந்து வருகிறது. லட்சங்களில் பணம் குவிக்கும் தொழிலாகவே நடைபெற்று வருவதாக அவ்வப்போது புகார்கள் வெளியாகின்றன. சமீப காலங்களாக பாலியல் ரீதியிலான குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. பொள்ளாச்சி சம்பவம் ஏற்படுத்திய ரணம் இன்னும் தீரான நிலையில், கல்லூரி  மாணவன் ஒருவன் 20க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளை தனது அறைக்கு அழைத்துச் சென்று கற்பழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கோவையில் மசாஜ் செண்டர் பெயரில் வெளிமாநில அழகிகளை வைத்து விபச்சாரம் நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கோவை, அடையார்பாளையம் சிவாஜி காலனியை சேர்ந்தவர் செல்வம், 26. இவர், மேட்டுப்பாளையம் ரோட்டில் சாய்பாபா கோவில் அருகே உள்ள தனியார் பேக்கரி முன் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த ஒரு இளைஞன் எதிரில் ஆயுர்வேத மசாஜ் மையம் உள்ளது. அதில் பல அழகிகள். தங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கே வரிசையாக நின்றிருந்த அழகிகளைப் பார்த்து அதிர்ந்தார் செல்வம். உடனே ஏடிஎம்மில் பணம் எடுப்பதாக கூறி விட்டு ஓடி வெளியே வந்து விட்டார். பின்னர் கோவை சாய்பாபா காலணி காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ஆயுர்வேத மசாஜ் மையத்துக்கு விரைந்து சென்று உள்ளே நுழைந்தனர்.

மசாஜ் சென்டரில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த 7 அழகிகளும், மசாஜ் செண்டரின் மேலாளரும் இருந்தனர். அவர்களைக் கைது செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் சோதனையில் ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் நடந்து வந்ததை உறுதி செய்தனர்.

விசாரணையில் மகேஷ் என்பவர் இந்த மசாஜ் சென்டர் நடத்தி வருவது தெரிய வந்தது. அந்த ஆயுர்வேத மசாஜ் மையத்தின் மேலாளராக திருச்சி மாவட்டம் முல்லை வாசல் பகுதியை சேர்ந்த முகிலன் (23) என்பவர் பணியாற்றி வருகிறார்.

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, அசாம் போன்ற மாநிலங்களில் இருந்து பெண்களை கோவைக்கு வரவழைத்துள்ளனர். கோவையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். பின்னர் அவர்கள் மசாஜ் சென்டரில் விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

செல்போன் மற்றும் வாட்ஸ் அப் மூலம் வாடிக்கையாளர்களை மசாஜ் சென்டருக்கு வரவழைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாட்ஸ்அப்பில் பார்த்து ஆசையோடு வருபவர்களுக்கு நுழைவுக் கட்டணம் நிர்ணயம் செய்கிறார்கள். உள்ளே நுழைந்ததும், அவர்களிடம் இருந்து அழகிகள் விருப்பப்படி பணம் வாங்கியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. ஒருவருக்கு ரூ.2,500 முதல் ரூ.20,000 வரை கிடைத்தது.

கைது

பல ஆண்கள் தங்களின் எல்லா பணத்தையும் இழந்துள்ளனர். வெளியில் சொல்ல முடியாததால் மனவேதனையுடன் அங்கிருந்து வெளியேறியதாகவும் தெரிய வந்துள்ளது. சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 அழகிகள், ஒரு ஆண் உள்பட 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மசாஜ் சென்டர் உரிமையாளர் மகேஷை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web