காலியாகும் நாதக கூடாரம்... 3000க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்!

 
திமுக

 நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் . இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு  செய்தியாளர் சந்திப்பில் பெரியார் அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் திமுக சார்பில் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சீமானின் இந்த பேச்சுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.  

நாதக நிர்வாகி

பெரியார் குறித்த சீமானின் பேச்சு பிடிக்காமல் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலர் அக்கட்சியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு காரணமாக  2021 சட்டப்பேரவை தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல் நாதக வேட்பாளர்களும் விலகினர். இந்நிலையில் 3000க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் உட்பட  மாற்றுக் கட்சியினர் முதல்வர்  மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர்.

சீமான்

அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 51 பொறுப்பாளர்கள் உட்பட 3,000 மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர். நாம் தமிழர் கட்சியை சேர்ந்த

மண்டல செயலாளர் - 1, 
மாவட்ட செயலாளர்கள் - 8, 
ஒன்றிய செயலாளர்கள் - 5, 
சார்பு அணி நிர்வாகிகள் - 9, தொகுதி செயலாளர்கள் - 6, 
முன்னாள் எம் பி வேட்பாளர்கள் - 3, 
முன்னாள் எம் எல் ஏ வேட்பாளர்கள் - 6 என 51 பொறுப்பாளர்கள் திமுகவில் இணைந்துள்ளனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web