நாளை பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள்!

 
  நாளை பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள்!

பல ஆண்டுகளாக சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தில் சொந்தமாக வீடு, நிலம் வாங்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருந்து வருகிறது.  அப்படி வாங்கும் சொத்துக்களை நல்ல நாளில், சுப முகூர்த்த நாளில் வாங்கவே விருப்பப்படுவார்கள். அந்த வகையில் முக்கிய விஷேச நாட்களில் பத்திர பதிவு அலுவலகத்தில் எப்போதும் இல்லாதை விட கூட்டம் அதிகமாக காணப்படும். இதன் காரணமாக நல்ல  நாளில் வாங்க நினைப்பவர்கள் ஏமாற்றம் அடையும் நிலை உருவாகும்.
இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பொதுமக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மங்களகரமான நாட்களாக  கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய நாட்களில்  பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

  நாளை பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள்!
தற்போது சித்திரை மாதத்தின் மங்களகரமான தினமான 30.04.2025 அன்று அதிக அளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. 
இதனை ஏற்று சித்திரை மாதத்தின் மங்களகரமான தினமான 30.04.2025 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும்
100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்கு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web