அதிர்ச்சி... ஒரே சேலையைக் கட்டிக் கொண்டு தாய் - மகள் ஆற்றில் குதித்து தற்கொலை!
![வர்ஷினி](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/01190f390ea08b0be19c4c0ca0d8e268.jpeg)
கர்நாடக மாநிலம், காகினா நதியில் இன்று காலை, ஒரே சேலையை கட்டியிருந்தபடி இரண்டு பெண்களின் உடல் கரையொதுங்கியது. அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் இது குறித்து உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், நதிக்கரையில் இருந்த இருந்த இரண்டு பெண்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் விசாரணையில், இரண்டு பெண்களும் ஒரே சேலையைக் கட்டிக்கொண்டு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தற்கொலை செய்து கொண்டவர்கள் அஃசல்பூர் தாலுகா நிலூர் கிராமத்தைச் சேர்ந்த சுமலதா (41) அவரது மகள் வர்ஷா (17) என்பது தெரிய வந்தது.
கடந்த சில நாட்களாக மனஉளைச்சலில் இருந்து வந்த தாயும், மகளும், தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!