தஞ்சையில் பச்சிளம் குழந்தையை கொலை செய்த தாய் கைது!!

 
தஞ்சையில் பச்சிளம் குழந்தையை கொலை செய்த தாய் கைது!!

தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கழிவறை தொட்டிக்குள் பெண் குழந்தை சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரியவந்தது. அதையடுத்து விரைந்து வந்த போலீசார், குழந்தையின் உடலை கைப்பற்றினர்.

அவர்கள் நடத்திய விசாரணையில் பிறந்த சில மணிநேரங்களிலே குழந்தை கொலை செய்யப்பட்ட விபரம் தெரியவந்து போலீசாரை அதிர்ச்சி அடையச் செய்தது. அதை தொடர்ந்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

தஞ்சையில் பச்சிளம் குழந்தையை கொலை செய்த தாய் கைது!!

அதில் பெண் ஒருவர் முகத்தில் மாஸ்க் அணிந்துகொண்டு, உடல் முழுவதும் போர்வையை போர்த்திக் கொண்டு கழிவறைக்குள் செல்கிறார். சுமார் அரைமணி நேரம் கடந்து தான் அவர் வெளியே வருகிறார்.

தஞ்சையில் பச்சிளம் குழந்தையை கொலை செய்த தாய் கைது!!

இதனால் அவர் குழந்தையை கொலை செய்திருக்கக் கூடும் என்று போலீசார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. கழிவறை தொட்டிக்குள் குழந்தையை மூழ்கடித்து கொல்லப்பட்ட சம்பவம் மக்களை பேரதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

இந்நிலையில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி கழிவறையில் சடலமாக பெண் சிசு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குழந்தையைப் பெற்று ஃபிளஷ் டேங்க்கில் போட்ட பெண் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூரில் பூதலூரைச் சேர்ந்த பிரியதர்சினி தனது குழந்தையை கொலை செய்துள்ளார் என நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இவரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது காவல்துறை.

From around the web