4 மாத குழந்தையை கொலை செய்து தாய் தற்கொலை!! பகீர் பிண்ணனி!!
அரியலூர் மாவட்டம் செந்துறை கொடுக்கூர் கிராமத்தில் வசித்து வந்தவர் ராஜேஸ்வரி.இவருக்கு வயது 27. இவருடைய கணவர், கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். கணவர் இறந்த நிலையில் மறுமணம் செய்துகொள்ளாமல் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளார். ராஜேஸ்வரி கடந்த 3 ஆண்டுகளாக அங்கேயே பணிபுரிந்து வந்தார்.
அவருக்கு திருப்பூரிலேயே வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு கர்ப்பமாகி விட்டார்.
பிரசவத்திற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜேஸ்வரி கொடுக்கூர் கிராமத்துக்கு வந்தார். அவருக்கு 4 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அக்கம் பக்கத்தில் வசித்து வந்தவர்கள், உறவினர்கள் அனைவரும் கணவர் ஏற்கனவே உயிரிழந்து விட்ட நிலையில் இந்த குழந்தையின் தகப்பன் யார் எனக் கேள்விகள் கேட்க ஆரம்பித்து விட்டனர். இதனால்ராஜேஸ்வரி கடும் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டுவதாக நினைத்து ராஜேஸ்வரி தனது 4 மாத கைக்குழந்தையை தண்ணீர் டிரம்மில் முக்கி கொலை செய்துவிட்டார்.
வீட்டின் அருகே இருந்த முந்திரி காட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குவாகம் போலீசார், ராஜேஸ்வரி மற்றும் 4 மாத குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தையை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?