2 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை!

 
கடலூர்

கடலூர் மாவட்டம் வேப்பூர்  மாளிகைபுர மேட்டு பகுதியில் வசித்து வருபவர்   அழகப்பன். இவர் எலக்ட்ரிசியனாக பணிபுரிந்து வரும் நிலையில்  வருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த நித்யாவுடன்  திருமணம் நடந்தது.

இவர்களுக்கு  ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தை உள்ளனர்.  கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று காலையிலும் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான  நித்யா தனது இரு குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் பொதுகிணற்றில் குதித்துவிட்டார்.  இதில் மூவரும் மூச்சுத்திணறி  பரிதாபமாக உயிரிழந்தனர்.  

கிணற்றில் சடலங்கள் கிடப்பதைக் கண்ட அப்பகுதி வழியாகச் சென்ற பொதுமக்கள்,  போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!