பட தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள்.. பிரபல நடிகை பகீர் புகார் !

 
ஸ்வஸ்திகா முகர்ஜி

பிரபல பெங்காலி நடிகையான ஸ்வஸ்திகா முகர்ஜி பெங்காலி மொழியில் பல படங்களில் நடித்துள்ளார். பல சீரிஸ்களிலும் நடித்துப் புகழ் பெற்றவர் இவர். தற்போது பாலிவுட் படங்களில் நடித்துவரும் ஸ்வஸ்திகா முகர்ஜி, ஹிந்தி மட்டுமல்லாமல் மராத்தி படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். 

இதுவரைக்கும் 50க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்திருக்கிறார். தற்போது ஷிபுர் என்ற ஹிந்தி படத்தில் அவர் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளர்கள் ரவிஷ் சர்மா மற்றும் சந்தீப் சர்கார் ஆகியோர் மீது ஸ்வஸ்திகா முகர்ஜி அளித்த பாலியல் புகார் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்வஸ்திகா முகர்ஜி

ஸ்வஸ்திகா முகர்ஜி கொல்கத்தா கோல்ஃப் கிரீன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதில், கடந்த சில மாதங்களாக தனக்கு ரவிஷ் சர்மா, சந்தீப் சர்கார் ஆகியோரிடம் இருந்து தங்களின் ஆசைக்கு இணங்க மறுத்தால் மார்பிங் செய்யப்பட்ட தன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும், என்று மிரட்டல் விடுத்து வருகின்றனர். தயாரிப்பாளர் சந்தீப் சர்க்கார் அவரது ஆசைக்கு என்னை இணங்குமாறு அழைக்கிறார். அவர் மட்டுமல்லாது அவருடைய நண்பரின் ஆசைக்கும் நான் இணங்க வேண்டும் என என்னைப் படுக்கைக்கு அழைக்கின்றனர். மேலும் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களையும் ரவிஷ் சர்மா இமெயில் செய்துள்ளார், என கூறியுள்ளார்.

ஸ்வஸ்திகா முகர்ஜி

நடிகை குற்றம்சாட்டியுள்ள இணை தயாரிப்பாளர் தற்போது அமெரிக்காவில் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் ரவிஷ் சர்மாவின் வழக்கறிஞர் ஷிபுர் கூறுகையில், படத்தின் இயக்குநர் அரிந்திரம் பட்டச்சாரியாவின் தூண்டுதலின் பேரில் தான் ஸ்வஸ்டிகா முகர்ஜி இப்படி நடந்துகொள்வதாக கூறியுள்ளார்.

From around the web