அதிர்ச்சி வீடியோ!! பட்டப்பகலில் மகன் கண்முன்னே தந்தை மீது கொலை வெறித்தாக்குதல்!!
இந்தியாவின் வட மாநிலங்களில் சமீபகாலமாக குற்றவியல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மகன் கண் முன்னே கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பஞ்சாப் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாபில் மான்சாவில் உள்ள பள்ளியில் 6 வயது மகனை பள்ளியில் விடுவதற்காக தந்தையுடன் டூவீலரில் வருகிறார். அவரை சில பேர் டூவீலரில் விரட்டி செல்கின்றனர்.
Visuals from Mansa where due to personal rivalry, six people broke both legs of a person who had come to drop his son off at school. They had a previous dispute as well, and earlier also an FIR under section 307 has been registered against them. pic.twitter.com/JEohspw5P8
— Gagandeep Singh (@Gagan4344) August 10, 2023
அத்துடன் ஏற்கனவே தயாராக பள்ளி அருகே நின்றிருந்த மேலும் 6 பேரும் தந்தையின் பைக்கை வழிமறிக்கின்றனர். வாகனத்தை நிறுத்தியதும் அவரை தடியால் சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர். அப்போது ஒருவர் அந்த சிறுவனை வாகனத்தில் இருந்துகீழே இறக்கி விடுகிறார். சிறுவன் தந்தையை அடிப்பதை பார்த்து அழத் தொடங்குகிறான். அடிபட்டு கீழே விழுந்த அவனது தந்தையைச் சுற்றி வளைத்து அந்த கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்துகிறது.
அந்த வழியாக வந்த ஒரு பெண் தாக்குதல் நடத்துபவர்களிடம் இருந்து அடிபடுபவரை மீட்க போராடுகிறார். ஆனால் அவரை தரையில் இழுத்துச் சென்று மீண்டும் அந்த கும்பல் நையப்புடைக்கிறது. பஞ்சாப்பில் பட்டப்பகலில் நடந்த இந்த தாக்குதல் சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?