மகன் கண் முன்னே கணவரைக் குத்திக்கொன்ற மனைவி... கொடூரம்!

 
தெலங்கானா

தெலுங்கானா மாநிலம் மஹபூப்நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகேஷ். இவரது மனைவி கவிதா ஆவார். இந்த தம்பதியருக்கு மொத்தம் 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் வெளியூரில் தங்கிப் படித்து வரும் நிலையில், மற்ற 2 மகன்களும் தங்களின் பெற்றோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நாகேஷின் வீட்டிற்குள் இருந்து திடீரெனப் பயங்கர அலறல் சத்தம் கேட்டுள்ளது.

திருப்பதி ஆம்புலன்ஸ்

சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் சத்தம் போட்டுக் கதவைத் திறக்கச் சொன்னதை அடுத்துக் கவிதா மெதுவாகக் கதவைத் திறந்துள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது நாகேஷ் ரத்த வெள்ளத்தில் கிடந்ததோடு, கவிதா தனது கணவரைக் கத்தியால் குத்தியதும் தெரியவந்தது. இந்தத் துயரமான சம்பவம் அவர்களது இளைய மகனின் கண் முன்னாலேயே அரங்கேறியுள்ளது.

உடனடியாக மீட்கப்பட்ட நாகேஷ் சிகிச்சைக்காக ஹைதராபாத் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டும் சிகிச்சை பலனின்றிப் பரிதாபமாக உயிரிழந்தார். இக்கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கவிதாவை உடனடியாகக் கைது செய்தனர். கவிதாவுக்கு வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், அதன் காரணமாக ஏற்பட்ட தகராறிலேயே இக்கொலை நடந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இது குறித்துக் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.