காவல் நிலையம் வாசலில் அடித்தே கொலை! திருவள்ளூரில் பரபரப்பு!

!
 
வனிதா

திருவள்ளூர் அடுத்த கண்ணதாசன் நகர் பெரியார் தெருவை சேர்ந்தவர் ராபர்ட் (48). இவர் காக்களூர் பகுதியில் உள்ள ஸ்ரீராம் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஆடிட்டராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி வனிதா (43). இவர்களுக்கு யஸ்வந்த் (12) என்ற மகனும், அஸ்வினி (4) என்ற மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் காலை காக்களூர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்றுள்ளார்.

அப்போது அதே வளாகத்தில் இந்தியா பில்டிங் ஹோம் லோன் என்ற நிதி நிறுவனத்தில் 26 வயதான பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். பணியை முடித்து இளம்பெண் லிப்டில் சென்றபோது அதற்குள் ராபர்ட் இருந்தார். இருவர் மட்டுமே லிப்டிற்குள் இருந்த நிலையில், இளம் பெண்ணிடம் ராபர்ட் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

 

சொந்த சகோதரனை அடித்தே கொலை செய்த கொடூர அக்கா!! பிணம்

 

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு ராபர்ட்டை நேரில் வரவழைத்து விசாரித்துள்ளனர். விசாரணைக்கு பிறகு இரவு 7 மணிக்கு போலீசார் ஆடிட்டர் மற்றும் பெண்ணை சமரசம் செய்து அனுப்பினர்.

இதனிடையே ஆடிட்டர் ராபர்ட், திருவள்ளூர் மகளிர் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது தவறாக நடக்க முயன்றாக புகார் அளித்த பெண்ணும் வந்துள்ளார். அப்போது புகார் அளித்த இளம் பெண்ணின் தம்பி மவுலி (23) என்பவர், “எனது அக்காவிடம் தவறாக நடக்க முயன்றாயா?” என ஆவேசமாக ஆடிட்டர் ராபர்ட்டின் தலையில் கையால் தாக்கினாராம். இதில் ஏற்கனவே உடல் நலக் குறைவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த ராபர்ட் நிலை தடுமாறி மயங்கி சுருண்டு விழுந்தார்.

திருவள்ளூர்

இதையடுத்து ராபர்டின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ராபர்ட் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து மவுலியை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் கூறுகையில், “கொலைசெய்யப்பட்ட ராபர்ட், முதுகுத்தண்டு பிரச்னைக்காக சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்தச் சமயத்தில் ராபர்ட்டின் தலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தம்பி கையால் தாக்கியதும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். இந்தக் கொலையில் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரின் வருங்கால கணவருக்கும் தொடர்பு உள்ளதாக ராபர்ட் தரப்பில் குற்றம்சாட்டுகின்றனர். அதனால் அவர்களையும் இந்த வழக்கில் சேர்ப்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. கொலைசெய்யப்பட்ட ராபர்ட்டுக்கு திருமணமாகி குழந்தைகளும் உள்ளனர். ராபர்ட்டின் மனைவி வழக்கறிஞராக உள்ளார்” என்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web