சொத்து பங்கு பிரச்சனை.. கணவரின் முதல் மனைவி மகனை கொடூரமாக கொன்ற சித்தி..!!
சொத்துப் பிரச்சனை காரணமாக கணவரின் முதல் மனைவியின் மகனை சித்தி கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், காணக்கியநல்லூர் அருகே உள்ள தச்சன்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் கௌதமன். இவருக்கு மூன்று மனைவிகள் இருந்த நிலையில் இரண்டு மனைவிகள் காலமாகியுள்ளனர். இதனைத்தொடர்ந்து கௌதமன், முதல் மனைவியின் மகன் யுவராஜ் (வயது 22), இரண்டாவது மனைவியின் மகள் மற்றும் மூன்றாவது மனைவி பூமதியின் 3 பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்த வேளையில் கடந்த 5ம் தேதி கௌதமன் உடல்நலக்குறைவால் உயிரிழக்கவே கௌதமன் பெயரில் திருச்சி பகுதிகளில் உள்ள 5 வீடுகளில் பங்கு கேட்டு மூன்றாவது மனைவி தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த யுவராஜ் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் குறித்து காணக்கியநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கௌதமன் இறந்ததும் எங்கே சொத்தில் பங்கு கிடைக்காதோ என நினைத்த பூமதி தனது அண்ணன் சின்னையனை ஏவி விட்டு சொத்தை பிரித்து தரும்படி யுவராஜிடம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். சில நாட்கள் சென்றதும் முறையாக பாகப்பிரிவினை செய்துகொள்ளலாம் என யுவராஜ் கூறவே அதனை ஏற்றுக்கொள்ள முடியாத பூமதி யுவராஜை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து பூமதி தனது கள்ளக்காதலனான அதே பகுதியைச் சேர்ந்த குட்டீஸ் என்கிற பாலசுப்பிரமணி, அவரது நண்பர்கள் அலெக்சாண்டர், ஸ்டீபன் ஆரோக்கியராஜ், சின்னையன் அவரது மகன் வல்லரசு ஆகிய 6 பேர் ஏவி யுவராஜை கொலை செய்ய திட்டமிட்டனர். அதன்படி வீட்டில் தனியாக இருந்த யுவராஜை வெட்டி கொலை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சின்னையன், பூமதி, அவரது கள்ளக்காதலன் பாலசுப்பிரமணி உள்ளிட்ட 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.