பகீர்... தாயின் கண்முன்னே மகனை வெட்டிக் கொன்ற மர்ம நபர்கள்!

 
சொந்த சகோதரனை அடித்தே கொலை செய்த கொடூர அக்கா!! பிணம்

ஏதோ வடமாநிலத்தில் நடந்த நிகழ்வு எல்லாம் கிடையாது. நம்ம தமிழகத்தில், திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு பகுதியில் அந்த கொடூர சம்பவம்  நிகழ்ந்துள்ளது. திருவேற்காட்டைச் சேர்ந்தவர் விஜயகாந்த் (வயது 20). இவர் இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் விஜயகாந்தை சரமாரியாக வெட்டினர். விஜயகாந்த் அவரது தாய் சத்யா கண்முன்னே 3 இளைஞர்களால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்.

சண்டை

மகனைக் காப்பாற்ற முயன்ற சத்யாவுக்கும் கைகளில் வெட்டு விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த திருவேற்காடு காவல் துறையினர் விஜயகாந்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், கொலையில் தொடர்புடைய 3 பேரை தேடி வருகின்றனர். அவர்கள் கைது செய்யப்பட்ட பின்னரே கொலைக்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web