மோசமான ரவுடி நாகேந்திரனின் உடல்நிலை.. மனுவை அதிரடியாக தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

 
ரவுடி நாகேந்திரன்

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், ஜூலை 5, 2024 அன்று 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அப்போது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததாக கூறப்பட்டாலும், விசாரணையில் சினிமாவை மிஞ்சும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின.

அதாவது, திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இந்தக் கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. குறிப்பாக, இந்தக் கொலைக்குப் பின்னணியில் இருந்த மூளையாக செயல்பட்டவர்கள் வடசென்னையைச் சேர்ந்த பிரபல தாதா ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு என்பது தெரியவந்தது. இந்தக் கொலை தொடர்பாக இதுவரை வழக்கறிஞர்கள் உட்பட 25க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். எழும்பூர் நீதிமன்றத்தில் 5000 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்த பின்னர் வழக்கு விசாரிக்கப்படுகிறது. முதல் குற்றவாளி பிரபல ரவுடி தாதா நாகேந்திரன், இரண்டாவது குற்றவாளி ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி, மூன்றாவது குற்றவாளி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன். இந்த சூழ்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி நாகேந்திரனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அதில், நாகேந்திரன் சில ஆண்டுகளுக்கு முன்பு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், சிகிச்சைக்காக குரோம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். இது தொடர்பான மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அவர் மேல்முறையீடு செய்தார். ஆனால் நீதிபதிகள் மறுத்துவிட்டனர். வழக்கு பட்டியலிடப்பட்டால், இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அவர்கள் கூறினர்.

வியாசர்பாடி நாகேந்திரன்

அதன்படி, வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ​​ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நாகேந்திரன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரினார். ஒரே கோரிக்கையுடன் இரண்டு நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்வதை ஏற்க முடியாது என்று கூறி ரூ. 50,000 அபராதம் விதித்து நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர்.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web