இந்திரா காந்தியை பெண் ஹிட்லர் எனக் கூறிய திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள மானங்கெட்ட காங்கிரஸ் கட்சியே”... நாராயணன் திருப்பதி கடும் விமர்சனம்!

தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி ராஜீவ் காந்திக்கு உங்களின் காங்கிரஸ் கட்சி செய்த, செய்கின்ற, செய்யப்போகிற துரோகத்தை ராஜிவ் காந்தியின் ஆன்மா மன்னிக்காது என கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்திராவும், ராஜீவும் தேசத்திற்காக ரத்தம் சிந்தினார்கள். பாஜக, ஆர் எஸ் எஸ் தலைவர்களின் வீட்டில் உள்ள நாய்கள் கூட தியாகம் செய்யவில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
வெட்கம் கெட்ட, மானங்கெட்ட காங்கிரஸ் கட்சியே, இந்திரா காந்தியை பெண் ஹிட்லர் என்று விமர்சித்த திமுகவோடு, ராஜிவ் காந்தியை படுகொலை செய்தவர்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த திமுகவோடு, அதிகாரத்திற்காக, அந்த அதிகாரம் தரும் பணத்திற்காக கூட்டணி அமைத்ததோடு மட்டுமல்லாமல், ராஜிவ் காந்தியை படுகொலை வழக்கின் குற்றவாளி பேரறிவாளனை கட்டி அணைத்து வரவேற்ற திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்களின் அடிமைகளாக விளங்கிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் தியாகம் குறித்து பேசுவது வெட்கக்கேடானது.
ஒரு நாய் கூட இது போன்ற நம்பிக்கை துரோகத்தை செய்யாது. எந்த நாயும் தன் தலைவனுக்கு விசுவாசமின்றி ஆட்சி, அதிகாரத்திற்காக தன் கட்சியை அடகு வைக்காது. ராஜிவ் காந்திக்கு உங்களின் காங்கிரஸ் கட்சி செய்த. செய்கின்ற, செய்யப்போகிற துரோகத்தை ராஜிவ் காந்தியின் ஆன்மா மன்னிக்காது என குறிப்பிட்டுள்ளார்.