இன்று ஆசிரியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை!!
ஆசிரியர் சங்கங்கள் தமிழகத்தில் பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றன. இது குறித்த தொடர் போராட்டங்களையும் ஆசிரியர்கள் நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளை ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக்கல்வித்துறை நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஆசிரியர் சங்கங்களுடனான பள்ளிக்கல்வித்துறையின் 3ம் கட்ட ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று ஆகஸ்ட் 1ம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் "தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் வேண்டுகோளை ஏற்று, பள்ளிக்கல்வி இயக்குநர் தலைமையில் இன்று பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கலாம். ஒவ்வொரு சங்கத்தின் சார்பில் ஒருவர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்" என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?