விபரீதம்... விடுதியில் பெண்களை ஆபாசமாகப் படம் எடுத்து காதலனுக்கு அனுப்பிய காதலி... பகீர்!

 
nellai nellai

நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு  தங்கி வேலை பார்த்து வந்த மகரஜோதி என்ற 39 வயது பெண், அங்கேயே  தங்கியுள்ள மற்ற பெண்களின் ஆபாசப் படங்களையும் வீடியோக்களையும் ரகசியமாகத் தனது செல்போனில் எடுத்துத் காதலனுக்கு அனுப்பிய அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  இங்கு தங்கியிருக்கும் பெண்கள் தங்களது அறைகளில் ஆடைகளை மாற்றும் போதும் மற்றும் குளிக்கும் போதும் அவர்களுக்குத் தெரியாமல் இந்த விபரீத செயலை அவர் தொடர்ந்து செய்து வந்ததாக தெரிகிறது.  சக பெண்களின் அந்தரங்கத் தன்மையைப் பாழாக்கும் வகையில் எடுக்கப்பட்ட அந்த ஆபாசப் பதிவுகள் அனைத்தையும், அவர் தூத்துக்குடியைச் சேர்ந்த கண்ணன் என்ற தனது காதலனுக்கு இணையதளம் மூலமாகத் தொடர்ந்து ரகசியமாக அனுப்பி வைத்துள்ளார்.

இந்த நிலையில், மகரஜோதியின் செல்போன் செயல்பாடுகளில் சந்தேகமடைந்த   காப்பாளர், அவரது நடமாட்டத்தைக் கண்காணித்து மொபைலை ஆய்வு செய்தபோதுதான் இந்த விபரீதக் கூட்டுச் சதி அம்பலமானது. இதனால் முற்றிலும் அதிர்ச்சியடைந்த  நிர்வாகத்தினர், இதுகுறித்து உடனடியாக  அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  புகார் அளித்தனர். காப்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில் உடனடியாக வழக்குப் பதிவு செய்த பெண் போலீசார், தீவிர விசாரணை நடத்தித் தலைமறைவாக முயன்ற மகரஜோதியை மின்னல் வேகத்தில் கைது செய்து தங்களது தீவிர விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தூத்துக்குடியில் வசிக்கும் தனது காதலன் கண்ணனை எப்போதும் குஷிப்படுத்துவதற்காகவே   பெண்களை ஆபாசமாகப் படம் எடுத்து அனுப்பியதாக மகரஜோதி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், அந்தப் படங்களைப் பார்த்த காதலன் கண்ணன், இன்னும் பல்வேறு கோணங்களில் பெண்களைப் படம் எடுத்து அனுப்புமாறு கட்டளையிட்டதால் தான் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதாகவும் அவர் போலீசாரிடம் கூறியுள்ளார்.   பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய இந்த விசித்திரமான விவகாரம், தற்போது ஒட்டுமொத்த நெல்லை மாவட்ட பொதுமக்களிடையேயும் விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவிகளிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.