கல்யாணமாகி ஒரு மாசம் தான்... புதுமணப்பெண் திடீர் தற்கொலை!

 
ஸ்ரீனு
 

தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தில் உள்ள சந்துரு கொண்டா மண்டலத்தில் உள்ள மங்கையபஞ்சார் கிராமத்தில் வசித்து வருபவர்  ஸ்ரீனு. இவரது மனைவி பத்மா. விவசாயக் கூலித் தொழிலாளர்களான இவர்களுக்கு தேவகி (23) என்ற மகள் இருந்தார். இவருக்கும், துப்பண்டா கிராமத்தைச் சேர்ந்த இளைஞருக்கும் மார்ச்28-ம் தேதி திருமணம் நடைபெற்றது.இந்நிலையில், திருமணம் முடிந்த 16வது நாளில் திருவிழாவுக்காக மங்கையபஞ்சார் கிராமத்திற்கு தேவகி வந்திருந்தார்.  ஏப்ரல்14ம் தேதி இரவு அனைவரும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, தேவகி பூச்சிமருந்தைக் குடித்தார்.
 
அவரின் அலறல் சத்தம் கேட்டு விழித்த அவரது பெற்றோர், உடனடியாக தேவகியை கொத்தகூடம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. அதன்பின் கம்மம் மருத்துவமனைக்கு தேவகி கொண்டு செல்லப்பட்டார். அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த தேவகி சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.

5வது திருமணம்
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தேவகி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். “தேவகி சமீபத்தில் தான் பிஎஸ்சி படித்து முடித்துள்ளார். இதன்பிறகு மேல்படிப்பு படிக்க வேண்டும் என தனது தாயிடம் தேவகி கூறியுள்ளார்.
 உடல்நிலை சரியில்லை எனக் கூறி திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி சம்மதிக்க வைத்தனர். இதையடுத்து அவருக்கு திருமணம் செய்து வைத்தனர். மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற தனது ஆசை நிராசையானதால் தேவகி மனமுடைந்து குழப்பத்திலேயே இருந்து வந்தார்.  இந்நிலையில், அவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்” என தெரிவித்துள்ளார்.  

From around the web