சாதனைப் பெண்களுக்கான புதிய தலைமுறை சக்தி விருதுகள் ’24!
புதிய தலைமுறை தொலைக்காட்சி, ஒவ்வொரு வருடமும் சமூகத்திற்கு தொண்டாற்றும் ஆளுமைகளை அடையாளம் கண்டு அவர்களை அங்கீகரிக்கும் விதமாக தமிழன் விருதுகள், சக்தி விருதுகள், ஆசிரியர் விருதுகள் என மூன்று விதமாக விருதுகளை வழங்கி கெளரவித்து வருகிறது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான புதிய தலைமுறையின் சக்தி விருதுகள்’24 இம்மாதம் 17ம் தேதி வழங்கப்பட இருக்கிறது.
புதிய தலைமுறை சக்தி விருதுகள் 2024
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) February 15, 2024
புலமைக்கான விருதாளர் யார்?
நாள்: பிப்ரவரி 17, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு...
இடம்: சென்னை வர்த்தக மையம் நந்தம்பாக்கம், சென்னை #PuthiyathalaimuraiSakthiAwards | #PTSakthiAwards2024 | #SakthiAwards2024 | #SakthiAwards | #PTSakthiAwards |… pic.twitter.com/va3CaGjmmC
சமூகம் தழைக்க பெண்கள் ஆற்றும் பங்கினை அங்கீகரித்து ஊக்கப்படுத்தும் வகையில் ஆறு பிரிவுகளில் சிறந்த விளங்கும் பெண்களுக்கு சக்தி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தலைமை, திறமை, துணிவு, புலமை, கருணை மற்றும் வாழ்நாள் சாதனையாளர் என்று ஆறு தலைப்புகளில் சிறந்து விளங்கும் பெண் ஆளுமைகளுக்கான பரிந்துரைகள் நடுவர் குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டு, அதிலிருந்து சிறந்தவர்கள் இந்த வருடத்திற்கான சக்தி விருதாளர்களாக தேர்வு செய்யப்படுகின்றனர்.
சக்தி விருதுக்கு தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு இம்மாதம் 17ம் தேதி மாலை சென்னையில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. புதிய தலைமுறையின் சக்தி விருதுகள்’24 சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள உலக வர்த்தக மையத்தில் பிப்ரவரி 17ம் தேதி மாலை 6 மணியளவில் நடைபெற உள்ளது.
இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், கல்வியாளர்கள், தொழில்முனைவோர்கள், தொழில்முறை வல்லுநர்கள், எழுத்தாளர்கள் மற்றும் திரைப்படக் கலைகஞர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொள்ள இருக்கின்றனர். சக்தி விருதுகள்’24, நிகழ்ச்சி, வரும் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினத்தன்று புதிய தலைமுறை தொலைக்காட்சயில் ஒளிப்பரப்பாக இருக்கிறது.