அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் புதிய சீருடை.. அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!

 
சீருடை மாணவிகள் மாணவி அரசு பள்ளி ராஜ்மோகன்

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் இன்று பல்வேறு வரலாற்றுத் தளங்களில் கள ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் அமைச்சர் ராஜ்மோகன், பள்ளி மாணவர்களின் நலன் சார்ந்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான புதிய சீருடை வடிவமைப்புப் பணிகள் நிறைவடைந்து, அது தற்போது முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் இறுதி ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மாணவிகள் அரசு பள்ளி

மாறிவரும் காலத்திற்கு ஏற்ப அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடைகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்துப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், புதிய ஆடை வடிவமைப்பு முதலமைச்சரின் பரிசீலனையில் உள்ளதாகவும், அவரது ஒப்புதல் கிடைத்தவுடன் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விபரங்களும் மிக விரைவில் வெளியிடப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

அரசு பள்ளி மாணவர்கள்

ஏற்கனவே ஏழை மாணவர்களின் நலனுக்காக முதலமைச்சர் இராணுவ வேகத்தில் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகப் பாராட்டியிருந்த நிலையில், இந்த புதிய சீருடை மாற்றமும் மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.