12ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய அப்டேட்!!
தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வித்தரத்தை அரசு பள்ளிகளிலும் கொண்டுவர வேண்டும் என தமிழக அரசு பல்வேறு நடைமுறைகளை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழிக்காட்டும் வகையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மாணவர்கள் ஆலோசனை பெற்று உயர்கல்வி முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம். தற்போது நடப்பு கல்வியாண்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கியமான நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
உயர்கல்வி கல்லூரி சேர்க்கைக்கு உரிய அனைத்து விண்ணப்பங்களும் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
அப்படி விண்ணப்பிக்கும் போது பெரும்பாலான கல்லூரிகள், சேர்க்கை தொடர்பான தகவல்களை மின்னஞ்சல், இ-மெயில் மூலம் வாயிலாக மாணவர்களுக்கு வழங்கி வருகின்றன.
இதன்படி மாணவர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்கான தனித்தனி இ-மெயில் முகவரியை அளிக்க வேண்டும். இதற்கு தற்போது 12ம் வகுப்பு பயிலும் ஒவ்வொரு மாணவரும் அவர்களாகவே இ-மெயில் முகவரியை உருவாக்கிட வகுப்பு ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும்.
இதை பரிசீலித்து மேற்பார்வை செய்து அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் இந்த இ-மெயில் முகவரியை EMIS தளத்தில் மாணவர் தகவல் பதிவேட்டில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இ-மெயில் முகவரியை தொடங்கியதும், அதற்குள் எப்படி நுழைவது, மற்றவர்கள் இ-மெயில் அனுப்புவது, தங்களுக்கு வந்த இ-மெயிலை எப்படி திறந்து பார்ப்பது, எப்படி வெளியேறுவது என்பது குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும். இ-மெயில் பாஸ்வேர்டை மாணவர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களுடன் பகிர வேண்டாம் என்பதையும் அறிவுறுத்த வேண்டும். புதிதாக தொடங்கப்பட்ட இ-மெயில் மூலம் cgtnss@gmail.com என்ற முகவரிக்கு “நான் புதிய மின்னஞ்சல் முகவரியை பெற்றேன்” எனவும், உயர்கல்வியில் மாணவர்களின் இலக்கு என்னவாக இருக்கிறது எனவும் இ-மெயில் அனுப்ப வேண்டும்.
இந்த செயல்பாடுகளை அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஜூலை 17 முதல் ஜூலை 30 வரை Hi-Tech லேப் கணினிகளை பயன்படுத்தி மேற்கொள்ள வேண்டும் என ஏற்கனவே ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் மாவட்ட முதன்மை பயிற்சியாளர்கள், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களிடமும் மேற்குறிப்பிட்ட செயல்பாடுகள் குறித்த தகவல்களை கேட்டு உறுதி செய்ய வேண்டும். மேலும் பள்ளிகளில் உள்ள பயிற்சி பெற்ற ஆசிரியர்களை இணைத்து ஏற்கனவே உருவாக்கப்பட்ட வாட்ஸ்-அப் குழுக்களில் பதிவிட்டு அவர்களிடம் இருந்து அறிக்கை பெற்று அனுப்ப வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?