அதிமுகவும், திமுகவும் பங்காளிகள்... நிச்சயமா தேர்தலுக்கு முன்னாடி ஒண்ணு சேருவாங்க... பகீர் கிளப்பிய அண்ணாமலை!

அதிமுகவும், திமுகவும் பங்காளி கட்சிகள். நிச்சயமா தேர்தல் அன்று இந்த இரு கட்சிகளும் ஒன்று சேர்வார்கள் என்று கோவையில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறினார்.
என்னுடைய வேலை மக்கள் பிரச்சனைகளைச் சொல்லி வாக்கு கேட்பது தான். கோவையில் எந்த வேட்பாளருடனும் எனக்கு சண்டை கிடையாது. அதற்காக நான் வரவும் இல்லை என்றார் அண்ணாமலை. என கூறினார். கோவை மக்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே இணைப்பு பாலமாக இருந்து கோவைக்கான திட்டங்களை வேகமாக செயல்படுத்துவேன் என்றார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, அதிமுகவும், திமுகவும் ஒன்று சேர்வதை தேர்தலுக்கு முன்பான கடைசி 10 நாட்களில் எதிர்பார்க்கிறேன். இரண்டு கட்சிகளும் என்னைத் தோற்கடிக்க பணபலம், படை பலத்தை வைத்து வருகிறார்கள். அண்ணாமலையை தோற்கடிக்க. திமுகவும், அதிமுகவும் சுற்றி சுற்றி வருகிறார்கள்.
ஏப்ரல் 10ம் தேதி மேல், இரண்டு வேட்பாளர்களில் ஒருவர் விட்டுக்கொடுத்து இன்னொருவரை நிறுத்தி ஓட்டு டிரான்ஸ்பர் செய்ய உள்ளனர். கேரளாவில் இது நடந்துள்ளது. கோவையில் முதல்முறை இதைப் பார்க்க போகிறோம் என அண்ணாமலை தெரிவித்தார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!