நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிற்கு கொரோனா !
Oct 25, 2021, 12:24 IST
தமிழகத்தில் கொரொனா 2 வது அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.இருந்த போதிலும் அரசியல் பிரபலங்கள், அதிகாரிகள், திரைத்துறையினர் , மருத்துவர்கள், சாமானியர்கள் என பாரபட்சமின்றி கொரோனா பரவி வருகிறது.
அந்த வகையில் தற்போது நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே அவரது மகனுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் தற்போது கலெக்டருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பிங்கர்போஸ்ட் முகாம் அலுவலகத்தில் திவ்யா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
From around the
web