கள்ளச்சாராய உயிரிழப்புக்கு 10 லட்சம்... ஜல்லிக்கட்டில் உயிரிழந்த என் மகனுக்கு இரங்கல் கூட இல்லையா? மாடுபிடி வீரரின் தாய் கதறல்!

 
ஜல்லிக்கட்டு


 
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி மதுரை சுற்று வட்டாரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்தவரின் தாய் கண்ணீர் மல்க அரசுக்கு கேள்விக்கணை தொடுத்துள்ளார். அதன்படி  கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அளிக்கும் தமிழக அரசு, ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த தன் மகன் நவீன் குமாருக்கு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என அவரின் தாய் மற்றும் சகோதரி கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளார்.  

ஜல்லிக்கட்டு

இதனையடுத்து  மாவட்ட ஆட்சியர் நேரில் வரும் வரை நவீன் குமார் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஜனவரி 14ம் தேதி அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 1,100 காளைகளும், 900 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். இதில் ஒரு சுற்றுக்கு 50 பேர் வீதம், மொத்தமாக 11 சுற்றுகள் நடைபெற்றன. இதில் 10வது சுற்றின் போது மதுரை விளாங்குடியைச் சேர்ந்த 22 வயதான இளைஞரான நவீன்குமார் களமிறங்கினார்.  இவர் மாடுபிடிக்க சென்ற சமயத்தில்   காளை குத்தியதில் மார்பு, கழுத்து பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது.

ஜல்லிக்கட்டு


உடனடியாக உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நவீன் குமார் உயிரிழந்தார்.  மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் நவீன் குமாரின் உடலை வாங்க மறுத்து குடும்பத்தினரும், உறவினர்களும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.   நவீன் குமார் தாய் மற்றும் சகோதரி இருவரும் “ எனது ஒரே மகன் ஆட்டோ ஓட்டி குடும்பத்தை பாதுகாத்து வந்தான்.  ஜல்லிக்கட்டு விளையாட சென்று இன்று எங்களுடன் இல்லை. அரசு சார்பாக நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று உயிரிழந்த என் மகனுக்கு, மாவட்ட ஆட்சியோ, மாநகராட்சி ஆணையோ ஒரு இரங்கல் கூட கூறவில்லை. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தால் தமிழக அரசு ரூ.10 லட்சம் நிவாரணமாக அறிவிக்கிறது. ஆனால் ஜல்லிக்கட்டு போட்டியில் விளையாடி உயிரிழந்தால், அரசு தரப்பில் இரங்கல் கூட தெரிவிக்காதது வேதனை அளிக்கிறது.  எங்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.  மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் நேரில் வரும் வரை உடலை வாங்க மாட்டோம் என போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! .

From around the web